Ranipet district create world record collect 186 mt of plastic with in 3 hours

3 மணி நேரத்தில் 2500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 158.914 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி ராணிப்பேட்டை மாவட்டம் உலக சாதனை படைத்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டதில் மே 27-ம் தேதி 6 நகராட்சி, எட்டு பேரூராட்சி, 288 கிராம ஊராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அரசு துறையை சார்ந்த பணியாளர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் என அனைவரும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உடன் இணைந்து பிளாஸ்டிக் நெகிழி கழிவுகள் இல்லாத மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற புதிய சாதனை முயற்சியானது மேற்கொள்ளப்பட்டது.
இதில் 3 மணி நேரத்தில் 2500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 186.914 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி புதிய உலக சாதனையை ராணிப்பேட்டை மாவட்டம் படைத்துள்ளது. இதற்கான சான்றிதழ்களை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட் உலக சாதனை நிறுவனத்தின் சீனியர் அட்ஜுடி கேட்டர் அமீத் கே.ஹிங்க்ரோனி உலக சாதனை சான்றிதழ்களை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அவர்களிடம் வழங்கினார். 

உலக அளவில் முதன்முறையாக 3 மணி நேரத்தில் 2500 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலிருந்து 186.914 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி எலைட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ், இந்தியா ரெக்கார்ட்ஸ், தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என நான்கு சாதனையில் இடம் பிடித்துள்ளது ராணிப்பேட்டை மாவட்டம். 
ஏற்கனவே ஸ்விட்ஸ்ர்லாந்து நாட்டில் மூன்று மணி நேரத்தில் 128 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்ததே உலக சாதனையாக இருந்த நிலையில் அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.