பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்... வானிலை மையம் எச்சரிக்கை.!!
தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரமடைந்துள்ள நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் புதன்கிழமை தொடங்குகிறது. இந்த அக்னி நட்சத்திரம் வருகிற 28ந்தேதி வரை நீடிக்கும். குறிப்பாக 24ந்தேதி வரை அனல் கக்கும். மேலும் இன்றும், நாளையும் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பான அளவை விட 5 டிகிரி வரை வெப்பநிலை உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பகல் நேரத்தில் அனல்காற்று வீசும். இரவில் புழுக்கம் அதிகமாக காணப்படும். எனவே பகல் நேரத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்களை தவிர வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். வெப்பத்தை தணிக்க இளநீர், மோர் உள்ளிட்ட இயற்கை பானங்களை அருந்துவது நல்லது.