👉 1896ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வெள்ளலூர் அண்ணாச்சாமி சுந்தரம் கோயமுத்தூரில் உள்ள வெள்ளலூர் கிராமத்தில் பிறந்தார்.

👉 1790ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி வீரபாண்டிய கட்டபொம்மன் 47வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.


முக்கிய தினம் :-


உலக ஈரநிலங்கள் தினம்

🌟 ஈரநிலங்களைப் பாதுகாப்பதன் மூலம் பல்லுயிர் வளங்கள் மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி 1971ஆம் ஆண்டில் ஈரான் நாட்டின் கரீபியன் கடற்பகுதியில் ராம்சர் (Ramsar) என்னுமிடத்தில் ஈரநிலங்களைப் பாதுகாத்தல் சம்பந்தமாக நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

🌟 இதனைக் கருத்தில் கொண்டே ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2ஆம் தேதி அன்று சர்வதேச அளவில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் ஏறக்குறை 1112 ஈரநிலப்பகுதிகள் காணப்படுவதுடன் அவை மொத்தமாக 89.37 மில்லியன் ஹெக்டர் நிலப்பகுதிகளைக் கொண்டிருக்கின்றன.

🌟 சுற்றுலா தலங்களை உருவாக்குதல், ரியல் எஸ்டேட் தொழில்கள் ஆகியனவும் நமது நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளும், பராமரிப்பு இன்மையும் இந்த நிலங்களை பாழ்படுத்திவருகிறது. எனவே, இந்த நிலங்களை பாதுகாக்கவும் அதன் பயன்களை மக்களிடம் கொண்டு செல்லவும் இந்த தினத்தை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.


நினைவு நாள் :-


திமீத்ரி மெண்டெலீவ்

✍ தனிம வரிசை அட்டவணையின் தந்தை என அழைக்கப்படும் திமீத்ரி மெண்டெலீவ் 1834ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி ரஷ்யாவிலுள்ள சைபீரியாவில் தோபோல்ஸ்க் என்ற இடத்தில் பிறந்தார்.

✍ இவர் வேதியியலின் தத்துவங்கள் (1868-1870) என்ற நூலை எழுதினார். பிறகு வேதியியல் தனிமங்களை அவற்றின் பண்புகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தாமல், தனிமங்களின் அணு நிறையை அடிப்படையாகக்கொண்டு ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கினார்.

✍ இதனை மார்ச் 6ஆம் தேதி 1869ஆம் ஆண்டு ரஷ்ய வேதியியல் கழகத்தில் சமர்ப்பித்தார். மேலும் அந்த அட்டவணையில் பல கண்டுபிடிக்கப்படாத தனிமங்களின் இயல்புகளை எதிர்வு குறி கொண்டு அட்டவணையை முழுமைப்படுத்தியிருந்தார்.

✍ தனிமங்களின் இயல்புகளை வரையறுத்து குறிப்பிடத்தக்க சாதனையை செய்த மெண்டெலீவ் தனது 72வது வயதில் 1907ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-


பா.வே.மாணிக்க நாயக்கர்

🌹 சிறந்த தமிழ் அறிஞரும், பொறியியலாளருமான பா.வே.மாணிக்க நாயக்கர் 1871ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி சேலம் மாவட்டம் பாகல்பட்டியில் பிறந்தார்.

🌹 இவர் 1896ஆம் ஆண்டு பொதுப்பணித் துறையில் கட்டுமானப் பொறியாளராக சேர்ந்தார். தமிழ் எழுத்துக்களைக் கொண்டு உலகின் அனைத்து மொழிகளில் உள்ள சொற்களையும் எழுத முடியும் என்று நிரூபித்தார்.

🌹 தமிழுக்கென தனி பல்கலைக்கழகம் உருவாக வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியவர். இவர் பல நூல்களை எழுதியுள்ளார். தமிழ் வேர்ச் சொற்களில் இருந்து பல அறிவியல் சொற்களை உருவாக்கிப் பயன்படுத்தினார்.

🌹 பொறியியல் துறையில் 60-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை கண்டறிந்த இவர் தனது 60வது வயதில் (1931) மறைந்தார்.

இன்றைய தின நிகழ்வுகள்

880 – பிரான்சின் மூன்றாம் லூயி மன்னர் சாக்சனியில் இடம்பெற்ற போரில் எசுக்காண்டினாவிய நோர்சு இராணுவத்திடம் தோற்றார்.

962 – புனித உரோமைப் பேரரசராக முதலாம் ஒட்டோ முடிசூடினார்.

1141 – லிங்கன் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்து மன்னர் இசுட்டீவன் தோற்கடிக்கப்பட்டு பேரரசி மெட்டில்டாவின் படைகளினால் கைது செய்யப்பட்டார்.

1822 – பிரித்தானிய இலங்கையின் ஆளுநராக சேர் எட்வேர்ட் பஜெட் நியமிக்கப்பட்டார்.[1]

1848 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: குவாடுலுப் கிடால்கோ உடன்படிக்கை எட்டப்பட்டது.

1848 – கலிபோர்னியாவில் தங்கம் தேடுவதற்காக சீனர்கள் கப்பலில் சான் பிரான்சிஸ்கோ வந்திறங்கினார்கள்.

1868 – சப்பானிய பேரரசு ஆதரவுப் படைகள் ஒசாக்கா கோட்டையை தோக்குகாவா படைகளிடம் இருந்து கைப்பற்றி அதனை எரித்து சாம்பலாக்கினர்.

1878 – துருக்கியின் மீது கிரேக்கம் போரை அறிவித்தது.

1880 – முதலாவது மின்சார வீதி விளக்குகள் அமெரிக்காவில் இந்தியானாவில் நிறுவப்பட்டன.

1899 – ஆஸ்திரேலியாவின் தலைநகரை சிட்னிக்கும் மெல்பேர்னிற்கும் இடையில் கன்பராவில் அமைப்பதென முதலமைச்சர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

1901 – விக்டோரியா மகாராணியின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.

1920 – எஸ்தோனியாவுக்கும் உருசியாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.

1943 – இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போரின் பின்னர் கடைசி செருமனியப் படைகள் சோவியத் ஒன்றியத்திடம் சரணடைந்தன. 91,000 பேர் உயிருடன் பிடிக்கப்பட்டனர்.

1946 – அங்கேரியக் குடியரசு அமைக்கப்பட்டது.

1971 – ஈரநிலங்களின் பாதுகாப்பு, அவற்றின் தாங்குநிலைப் பயன்பாடு தொடர்பான பன்னாட்டு ராம்சர் சாசனம் ஈரானில் கையெழுத்திடப்பட்டது.

1971 – உகாண்டாவில் ஒரு வாரத்தின் முன்னர் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர் இடி அமீன் அரசுத்தலைவராகத் தன்னை அறிவித்தார்.

1972 – டப்ளினில் பிரித்தானிய தூதரகம் தேசியவாதிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.

1982 – சிரியாவின் ஹமா நகரில் சிரிய அரசு மேற்கொண்ட தாக்குதல்களில் கிட்டத்தட்ட 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1989 – ஆப்கான் சோவியத் போர்: ஒன்பது ஆண்டு கால முற்றுகையின் பின்னர் கடைசி உருசியப் படைகள் ஆப்கானித்தானில் இருந்து வெளியேறின.

1990 – தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் பிரடெரிக் வில்லியம் டி கிளர்க் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தடையை நீக்குவதாகவும், நெல்சன் மண்டேலாவை சிறையில் இருந்து விடுவிக்கவிருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

1998 – பிலிப்பீன்சில் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 104 பேர் உயிரிழந்தனர்.

2005 – கனடிய அரசு 2005 சூலை 20 முதல் ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கும் குடிமைத் திருமணச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது.

2012 – பப்புவா நியூ கினியில் பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதில் 146-165 வரையானோர் உயிரிழந்தனர்/.

இன்றைய தின பிறப்புகள்

1522 – லொடோவிக்கோ பெராரி, இத்தாலியக் கணிதவியலாளர் (இ. 1565)

1859 – ஹேவ்லாக் எல்லிஸ், பிரித்தானிய உளநலவியலாளர் (இ. 1938)

1871 – பா. வே. மாணிக்க நாயக்கர், அறிவியல் தமிழ் வளர்த்த தமிழிஞர் (இ. 1931)

1882 – ஜேம்ஸ் ஜோய்ஸ், அயர்லாந்து எழுத்தாளர், கவிஞர் (இ. 1941)

1896 – வெ. அ. சுந்தரம், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி (இ. 1967)

1905 – அய்ன் ரேண்ட், உருசிய-அமெரிக்க எழுத்தாளர், மெய்யியலாளர் (இ. 1982)

1913 – மசனோபு புக்குவோக்கா, சப்பானிய வேளாண் அறிஞர், மெய்யியலாளர் (இ. 2008)

1915 – குஷ்வந்த் சிங், இந்திய ஊடகவியலாளர், எழுத்தாளர் (இ. 2014)

1933 – தான் சுவே, பர்மாவின் 8-வது பிரதமர்

1939 – தாலே தோமஸ் மார்டென்சென், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 2014)

1947 – சோ. கிருஷ்ணராஜா, ஈழத்து மெய்யியலாளர், கல்வியாளர் (இ. 2009)

1949 – சுனில் வெத்திமுனி, இலங்கைத் துடுப்பாட்ட வீரர்

1977 – சக்கீரா, கொலம்பியப் பாடகி, நடிகை

1985 – உபுல் தரங்க, இலங்கைத் துடுப்பாட்ட வீரர்

இன்றைய தின இறப்புகள்

1594 – கோவானிப் பீர்லூயிச்சி தா பலஸ்த்ரீனா, இத்தாலிய இசையமைப்பாளர் (பி. 1525)

1907 – திமீத்ரி மெண்டெலீவ், தனிம அட்டவணையைத் தொகுத்த உருசிய வேதியியலாளர் (பி. 1834)

1914 – தில்லையாடி வள்ளியம்மை, இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த தென்னாப்பிரிக்கத் தமிழ்ப் பெண் போராளி (பி. 1898)

1955 – ஓஸ்வால்ட் அவேரி, கனடிய-அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர் (பி. 1877)

1960 – மு. இராகவையங்கார், தமிழக ஆய்வாளர், பதிப்பாசிரியர், இதழாசிரியர், சொற்பொழிவாளர், கவிஞர் (பி. 1878)

1970 – பெர்ட்ரண்டு ரசல், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய மெய்யியலாளர், கணிதவியலாளர் (பி. 1872)

1982 – மோகன் லால் சுகாதியா, இராஜஸ்தான் முதலமைச்சர் (பி. 1916)

1987 – ஆபிரகாம் செல்மனோவ், உருசிய இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1913)

2009 – கே. கோவிந்தராஜ், இலங்கை மலையகத் தமிழ் எழுத்தாளர், பத்திரிகையாளர் (பி. 1949)

2010 – கொச்சி ஹனீஃபா, மலையாளத் திரைப்பட நடிகர், இயக்குனர் (பி. 1948)

2013 – ப. சண்முகம், புதுச்சேரி மாநிலத்தின் 9வது முதலமைச்சர் (பி. 1927)

2014 – பிலிப் சீமோர் ஹாப்மன், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர் (பி. 1967)

இன்றைய தின சிறப்பு நாள்

ஸ்டாலின்கிராத் சமர் வெற்றி நாள் (உருசியா)

கண்டுபிடிப்பாளர் நாள் (தாய்லாந்து)

உலக சதுப்பு நில நாள்