ராணிப்பேட்டை மாவட்டம், மகேந்திரவாடி-அன்வர்திகான்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே, தண்டவாளத்தில், சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக. காட்பாடி ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், காட்பாடி ரயில்வே இன்ஸ்பெக்டர் சித்ரா உத்தரவின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முரளி மனோகர் மற்றும் சலீம் தலைமையிலான போலீசார். தண்டவாளத்தில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு, வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் சந்தனக் கலரில் அரைக்கை சட்டையும், நீலம் கருப்பு வெள்ளையில் கோடுபோட்ட லுங்கியும் அணிந்திருந்தார். இடது வயிற்றில் ஒரு மச்சம் இருந்தது. இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்த காட்பாடி ரயில்வே போலீசார், இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.