தை அமாவாசை ஜனவரி 31 தை 18 திங்கட்கிழமை அன்று வருகிறது. ஜனவரி 31ம் தேதி பிறபகல் 1.59 மணிக்கு அமாவாசை திதி தொடங்கி பிப்ரவரி 1ம் தேதி 12.02 வரை உள்ளது. அதனால் ஜனவரி 31ம் தேதி முழுவதும் முன்னோர்களுக்குத் திதி, தர்ப்பணம் கொடுக்கலாம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும் தினம் மிகவும் முக்கியமானது. அதிலும் குறிப்பாக ஆடி, புரட்டாசி, தை மாதம் வரும் அமாவாசை தினங்கள் மிகவும் விசேஷமானது. பொதுவாக ஓவ்வொரு அமாவாசை தினங்களிலும் தர்ப்பணம் கொடுக்க வேண்டியவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது அவசியம்.
ஜனவரி 31 அன்று தர்ப்பணம் கொடுக்க நல்ல நேரம்: காலை 09.00 - 10.30, மதியம் 12.00 - 01.30
பிண்டம் வைத்து வழிபட நல்ல நேரம்: மதியம் 12.00 - 01.30
படையல் வைக்க நல்ல நேரம்: மதியம் 12.00 - 01.30