தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் அட்டவணை வெளியீடு தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் 'நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும்' என தெரிவித்தார்.
மேலும் தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். அதன்படி தேர்தல் அட்டவணை விவரம் பின்வருமாறு:-
அட்டவணை விவரம் | நாள் |
---|---|
வேட்புமனு தாக்கல் துவக்கம் | ஜனவரி 28 |
வேட்புமனு இறுதி நாள் | பிப்ரவரி 04 |
வேட்புமனு பரிசீலனை | பிப்ரவரி 05 |
வேட்புமனு வாபஸ | பிப்ரவரி 07 |
வாக்குப்பதிவு நாள் | பிப்ரவரி 19 |
வாக்கு எண்ணிக்கை | பிப்ரவரி 22 |