ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. மேலும், ஆந்திராவில் பெய்த பலத்த மழையால் கலவகுண்டா அணை நிரம்பியுள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பொன்னையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலாற்றில் வெள்ளம் ஓடுகிறது.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்தது .
வாலாஜாவில் அதிகபட்சமாக 15.2 மி.மீட்டர் மழை பெய்துள்ளது .
மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு ( மி.மீட்டரில் ) : அரக்கோணம் 4.2 ,
ஆற்காடு 1 ,
காவேரிப்பாக்கம் 9 ,
வாலாஜா 15.2 ,
அம்மூர் 4.2 ,
சோளிங்கர் 7.